வியாழன், 12 ஜூலை, 2012

தமுமுக வின் மக்கள் சேவைகளில் மகுடமான ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா!

தமுமுக வின்  மக்கள் சேவைகளில் மகுடமான ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா!





தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மக்கள் சேவைகளின் மகுடமான அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா நிகழ்ச்சிகள் இன்ஷா அல்லாஹ்.... 3 தினங்களில் அடுத்தடுத்து இறைவனின் மிகப்பெரும் கிருபையினார் மக்கள் சேவைக்காக அர்பணிக்கப்பட இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்...


ஜூலை 14 - 2012 லால்பேட்டையில் தமுமுக ம.ம.க வின் தலைவர் மவ்லவி ஜெ.எஸ்.ரிபாயி அவர்களும் ம.ம.கவின் பொதுச்செயலாளர் அண்ணன் தமிமுன் அன்சாரி அவர்களும் கலந்துகொண்டு அர்பணித்து சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்கள்.

ஜூலை 15 - 2012 திருச்சி ஏர்போர்ட் கிளை சார்பில் தமுமுக ம.ம.க வின் தலைவர் மவ்லவி ஜெ.எஸ்.ரிபாயி அவர்கள் கலந்துகொண்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் அர்பணித்து உரை நிகழ்த்துகிறார்கள்.

ஜூலை 18 - 2012 குமரி மாவட்டம் குளச்சலில் தமுமுகவின் மூத்த தலைவர் அண்ணன் செ.ஹைதர் அலி அவர்கள் கலந்துகொண்டு அவசர ஊர்தியை  அனைத்து சமுதாய மக்களுக்கு மத்தியில் அர்பணித்து உரை நிகழ்த்துகிறார்கள்.


இது தமுமுகவின் மக்கள் சேவை புரட்சி... மனிதநேய பண்பாளர்களன் வளர்ச்சி...

சமுதாய நியாயவான்களே பொதுசேவையில் நீங்களும் பங்கெடுக்க வாருங்கள்...

என்று மக்கள் சேவையில்....

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்,
மனிதநேய மக்கள் கட்சி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக