சனி, 28 ஜூலை, 2012

திருவண்ணாமலை தமுமுகவின் 102 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

திருவண்ணாமலை தமுமுகவின் 102 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

திருவண்ணாமலை தமுமுகவின் 102 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமுதாய சீர்திருத்தப்பொதுக்கூட்டம் காந்தி சிலை அருகில் 17-07-2012 மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவண்ணாமலை நகர தலைவர் A.R. நாசர் உசேன் தலைமை வகித்தார். நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முன்னதாக பெரிய பள்ளி இமாம் A.K.அன்சர் பாஷா அவர்கள் கிராஅத் ஓதி துவங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் டி.அப்துல் ஹமீது அவர்கள் துவக்க உரையாற்றினார்.

மெளலான முப்தி பி.எஸ்.அப்துல் காதிர்,  சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.கண்ணன், சி.பி.ஐ திரு.இரா.தங்கராஜ், ம.தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.சீனி கார்த்திக்கேயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திரு.க.மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தமுமுக ம.ம.க வின் மாநில தலைவர் மவ்லவி.ஜே.எஸ்.ரிபாயி ரஷாதி, தமுமுக வின் மாநில துணை தலைவர் குணங்குடி ஆர்.எம்.ஹனீபா, ம.ம.க மாநில அமைப்புச்செயலாளர் எஸ்.எஸ் நாசர் உமரி, தமுமுக வின் மாநில செயலாளர் கோவை செய்யது ஆகியோர் அனைத்து சமுதாய மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை அர்ப்பணித்து எழுச்சி உரை நிகழ்த்தினார்கள்.

இதில் தமுமுக மாவட்ட செயலாளர் S.ஜமால், ம.ம.க மாவட்ட செயலாளர் A.நஜீர்.MC., மாவட்ட பொருளாளர் S.முஹம்மது ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஜமாத்தார்கள், பொதுமக்கள். பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

முடிவில் ம.ம.க நகர செயலாளர். M.E.சாகுல் ஹமீது நன்றி கூறினார். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக