சனி, 10 ஜூலை, 2010

அம்பத்தூரில் 85வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
Saturday, 10 July 2010

திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூரில் தமுமுகவின் 85வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. இதனை தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.

தலைமை நிர்வாக உறுப்பினர் குணங்குடி ஹனிபா, மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கருத்துரையாற்றினர்.மாவட்ட தமுமுக தலைவர் கமருதீன், மாவட்டச் செயலாளர் ஹாரூன் ரஷீத், மாவட்டப் பொருளாளர் ஷேக் தாவுத், ம.ம.க மாவட்டச் செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.




செவ்வாய், 6 ஜூலை, 2010


தமுமுக வின் 85வது அவசர ஊர்தி அர்ப்பணிப்பு!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றறக் கழகத்தின் திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூர் கிளை சார்பாக 85வது அவசர ஊர்தி அற்பணிப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் ஜுலை 9 அன்று நடைபெறுகின்றது.

இதில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா மற்றும் மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.