ஞாயிறு, 22 ஜூலை, 2012

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் தமுமுகவின் 98 (3) வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் தமுமுகவின் 98 (3) வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

கடந்த 15-07-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 98 ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவும் சிறைவாசிகளை விடுதலைசெய்யக்கோரியும், முஸ்லிம்களுக்கு மத்தியளவில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரியும் இரட்டை கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது. பகுதி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமுமுக ம.ம.கவின் மாநில தலைவர் மவ்லவி.ஜெ.எஸ்.ரிபாயி அவர்களும் தமுமுகவின் மாநில செயலாளர் கோவை செய்யது அவர்களும், மாநில மருத்துவ சேவை அணிச்செயலாளர் கித்ரு அவர்களும் கலந்துகொண்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆம்புலன்ஸை அர்பணித்து கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பரை ஆற்றினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம், மாவட்ட செயலாளர் இப்ராஹீம் ஷா, ம.ம.க மாவட்ட செயலாளர் பைஸ் அஹமது, மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் அஹமது உள்பட நிர்வாகிகள் மற்றும் சமுதயா மக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக