சனி, 2 ஆகஸ்ட், 2014

களக்காடு நகர தமுமுக தலைவர் வபாத்தானார்.

நெல்லை,கிழக்கு மாவட்டம் களக்காடு #தமுமுக நகர தலைவராக சகோ.ஆரிப் இருந்து வந்தார். இன்று மாலை ஆம்புலன்ஸில் ஒரு நோயாளியை சேர்த்துவிட்டு வந்தார்.பிறகு நோன்பை திறந்து விட்டு மீன்டும் ஒரு நோயாளியை அவசர ஊர்தியில் கொண்டு சென்றார்.

போகும்வழியில் நாங்குநேரி பை பாஸ் சாலையில்ஆரிபிற்க்கு நெஞ்சுவலி ஏற்ப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை ரோட்டோரத்தில் நிறுத்தியவுடன் அவரது உயிர் பிரிந்தது.(இறைவன் நாட்டம்) ( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஹூவூன்

எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவரை சுவனத்தில் நுழைய செய்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக