திங்கள், 24 மே, 2010

தமுமுக வின் 83 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏற்கனவே தமிழகம் முழுவதும் அனைத்து சமுதாய மக்களுக்கும் 82 ஆம்புலன்ஸ்களை அர்ப்பணித்து ஜாதி மதம் பாறாது சேவை செய்து வருகிறது. அதன் தொடர்சியாக 83 வது அவசர ஊர்தியை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் எதிர்வரும் 29-05-2010 சனிக்கிழமை தமுமுகவின் மாநில பொது செயலாளர் செ.ஹைதர் அலி அவர்களால் இறைவன் நாடினால் அணைத்து சமுதாய மக்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மாபெரும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கிறது. அந்த பொதுக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் எம்.தமீமுன்அன்சாரி அவர்களும், தமுமுக வின் மாநில துணை செயலாளர் கோவை.ஈ.உமர் அவர்களும், தமுமுக மற்றும் மமகவின் மாநில பேச்சாளர் கோவை ஜாகிர் அவர்களும் கலந்துகொண்டு எழுச்சி உரை நிகழ்த்த இருக்கிறார்கள்.அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்.
அன்புடன் அழைக்கிறது...
தமுமுக மற்றும் மமக
சத்தியமங்கலம் கிளை,
ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக