வியாழன், 10 நவம்பர், 2011

அதிரையில் 95வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அதிரை கிளை சார்பில் 11.09.2011 அன்று மாபெரும் சமய நல்லிணக்க பெருவிழா மற்றும் அவசர கால ஊர்தி(ஆம்புலன்ஸ்) அர்பணிப்பு விழா நடைபெற்றது.
நகர த.மு.மு.க தலைவர் உமர் தம்பி தலைமைஏற்க சகோதரர் யி.கலந்தர் (முன்னாள் மாவட்ட செயலாளர் ம.ம.க) தொகுத்து வழங்கினார்.


இவ்விழாவில் த.மு.மு.க பொதுச்செயலாளர் ஷி.ஹைதர் அலி, ம.ம.க துணை பொதுச்செயலாளர் வி.தமிமுன் அன்சாரி, த.மு.மு.க மாநிலச் செயலாளர் பேரா. யி.ஹாஜா கனி, ஆகியோர் சிறப்புரையாற்றினர். அமீரக தலைவர் அப்துல் ஹாதி முன்னிலை வகித்தார். அத்துடன் அவசரகால ஊர்தி (ஆம்புலன்ஸ்) அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இறுதியாக, த.மு.மு.க நகர செயலாளர் வி.பி.தையூப் நன்றி கூறினார். இந்நிகழ்வில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக