வியாழன், 10 நவம்பர், 2011

பொட்டல்புதூரில் தமுமுகவின் 90வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

ஆழ்வார்குறிச்சி:பொட்டல்புதூரில் அனைத்து சமுதாய மக்களுக்காக த.மு.மு.க., சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடந்தது.கடையம் ஒன்றியம் பொட்டல்புதூர் த.மு.மு.க., சார்பில் புதிய ஆம்புலன்சை பொதுமக்களுக்காக வாங்கி அதன் அர்ப்பணிப்பு விழா நடந்தது.
பொட்டல்புதூரில் நடந்த விழாவிற்கு த.மு.மு.க., கிளை தலைவர் முகம்மது அலி ஜின்னா தலைமை வகித்தார். துணைத் தலைவர் சாகுல்ஹமீது வரவேற்றார்.


ஷாபி ஜமாத் தலைவர் முகமதுஅலி, ஜமாத் தலைவர் முகமதுகனி, கிளை பொருளாளர் மதார்கனிலெப்பை, துணை செயலாளர் முகமதுகான், மனிதநேய மக்கள் கட்சி கிளை செயலாளர் ராஜாஜி, கிளை பொருளாளர் காஜாமைதீன், ஒன்றிய பேச்சாளர் ஈசாக் அலி, த.மு.மு.க., கிளை தலைவர்கள் வீராசமுத்திரம் நாகூர்கனி, சம்பன்குளம் அப்துல்ரகுமான், முதலியார்பட்டி பாசூல்அஷ்ரப் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர்கள் நம்பிராஜன், பழனிக்குமார், கடையம் வட்டார மோட்டார் வாகன சங்க தலைவர் முருகேசன், பொட்டல்புதூர் வியாபாரிகள் சங்க தலைவர் செய்யது மசூது, பொருளாளர் அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.


மாநில பொது செயலாளர் ஹைதர்அலி, மாநில செயலாளர் கோவை செய்யது பேசினர்.புதிய ஆம்புலன்ஸ்க்கான சாவியை த.மு.மு.க., மாநில பொதுசெயலாளர் ஹைதர் அலி கிளை தலைவர் முகமதுஅலிஜின்னாவிடம் வழங்கினார். மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், செயலாளர் உஸ்மான்கான், மாவட்ட பொருளாளர் செய்யதுஅலி, மாவட்ட துணை செயலாளர் சர்தார்அலிகான், கடையம் ஒன்றிய செயலாளர் காஜாஅலாவுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன்சேட்கான், மாவட்ட பொருளாளர் ரசூல்மைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் நயினார்முகமது, சுல்தான்மைதீன், கடையம் ஒன்றிய செயலாளர் மீரான்மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கிளை செயலாளர் ஆட்டோ சித்திக் நன்றி கூறினார். பொதுமக்கள் தங்கள் அத்யாவசிய தேவைகளுக்கு 99445 09050 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆம்புலன்சை பயன்படுத்திக் கொள்ளலாம் என த.மு.மு.க.,வினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக